கடலூர், ஜூன் 14- கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கல்குவாரி குட்டை யில் மூழ்கிய மகனை காப்பாற்றச் சென்ற தாயும் நீரில் மூழ்கி பலியானார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆலம்பாடி கிரா மத்தைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி திவ்யா (26). இவர் அதே பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் துணி துவைப்ப தற்காக மகன் ஆரியன் (8) உடன் சென்றுள்ளார். திவ்யா துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது, குட்டையில் விளை யாடிக் கொண்டிருந்த ஆரியன் திடீரென தண்ணீருக்குள் மூழ்கியுள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யா, மகனைக் காப்பாற்ற குட்டையில் இறங்கியபோது அவரும் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி தீய ணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராமநத்தம் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.