கடலூர், ஜூலை 17- ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) கடலூர் கிளை சார்பில் கேப்பர்மலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறப்புத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாயன்று (ஜூலை 16) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்த ரம் செய்ய வேண்டும், வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஈடு பட்ட ஒப்பந்த ஊழியர்களை மின் துறை அமைச்சர் நேரடியாக சந்தித்து நிரந்தரம் செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும், ஊதியமில்லாமல் பல ஆண்டுகளாக பணிபுரியும் பகுதி நேர ஊழி யர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் செயலாளர் என்.தேசிங்கு, பொரு ளாளர் என்.கோவிந்தராசு, நிர்வாகிகள் எஸ். பன்னீர்செல்வம், ஆர்.ஆறுமுகம், டி.ராஜ கோபால், டி.ஜீவா, ஜே.வெற்றிவேல், வி. ஞானசேகரன், ஆர்.வடிவேலன், என்.கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.