கடலூர், மார்ச் 3- ஏலச்சீட்டு நடத்தி ரூ.12.68 லட்சம் மோசடி செய்ததாக நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த கணவன்-மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகிலுள்ள தமிழ்குச்சிப் பாளையத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி மகன் நாகப்பன் (44). விழுப்புரம் மாவட்டம் முகையூரி லுள்ள டாஸ்மாக் கடையின் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். தனது மனைவி சரளாதேவி (34) உடன் இணைந்து வீட்டிலேயே பதிவு செய்யப்படாத ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் அருகிலுள்ள வைடபாக்கத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் மனைவி சுந்தராம்பாள் (58) கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் ஏலச்சீட்டிற்காக ரூ.4.68 லட்சம் கட்டியுள்ளார். மேலும், கடன் தொகையாக ரூ.8 லட்சம் செலுத்தியுள்ளார். இத்தொகையை திருப்பிக் கேட்ட போது கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து மோசடி செய்து அவரை ஏமாற்றியுள்ளனர். எனவே, அவர் இதுகுறித்து கடலூரிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்ப திவு செய்த துணை கண்காணிப்பாளர் எம்.அறிவழகன், ஆய்வாளர் ஏ.முரளி ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். இதில், தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுப்பட்டி ருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த னர். திங்கள்கிழமையன்று உதவி ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் தலைமைக்காவலர்கள் பி.பவானி, சாந்த குமாரி ஆகியோர் தமிழ்குச்சிப்பாளையம் சென்று இருவரை யும் கைது செய்து கடலூரிலுள்ள தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களிடம் வேறு யாராவது சீட்டுக்கட்டி ஏமாந்தி ருந்தால் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என்றும், உரிய அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு நடத்துப வர்கள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளா தார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.