சிதம்பரம், ஜூலை 21- அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பணிநிரவல் ஊழியர்க ளின் பிரதிநிதிகள் குமரவேல், யாதவசிங், பன்னீர்செல்வம், வேல்ராஜ், ஏ.பன்னீர்செல் வம், முருகன் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர். சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் பணிபுரிந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மிகை ஊழியர்களாக கருதி 2,500க்கும் மேற்பட்டவர்களை தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பணி நிரவல் செய்துள்ளனர். ஊழியர்களை தொலை தூரம் பணி நிரவல் செய்ததால் மன உளைச் சலுக்கு ஆளாகி இதுவரை 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்துள்ளனர். உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு வேலையும் நிவார ணமும் வழங்க வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஊழி யர்களை மிகை ஊழியராக கணக்கெடுப்பு செய்ததில் பல்வேறு குளறுபடிகளும் முறை களும் நடந்துள்ளது அதை சரி செய்ய வேண்டும். பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி பணிநிரவல் மேற்கொள்ளப் படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்ட வர்களை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கக் கூடாது. பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள முறைகேடுகளுக்கும் ஏற்பட்ட நிதி சிக்கலுக் கும் நீதி அரசர் மூலம் நீதி விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.