tamilnadu

குண்டர் தடுப்புக் காவலில் 5 பேர் கைது

கடலூர், மே 17 - கடலூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவா (எ) தேவநாதன் (26), பெரங்கியம் கிராமத்தைச்சேர்ந்த நீலமேகன் (23), சக்திவேல் (39), மேல்வடக்குத்தைச் சேர்ந்த  வீரமணி (22), இந்திராநகரைச் சேர்ந்த ஜோ.ஜெயராஜ் (43) ஆகியோர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

;