கடலூர், ஆக. 6- நெல்லிக்குப்பம் இஐடி சர்க் கரை ஆலை நிர்வாகம் கழிவு என்ற பெயரில் பல ஆயிரம் டன் கரும்பை விவசாயிகளிடம் அபகரித்து வருவ தாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் செயலாளர் தென்ன ரசு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலைக்கு ஆட்கள் மூலம் வெட்டி அனுப்பிய கரும்பில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கழிவு செய்தும், இயந்திரம் மூலம் வெட்டி அனுப்புகிற கரும்பில் 19.35 சதவீதம் வரை எடையை குறைத்து ரசீது கொடுத்துள்ளனர். இதுகுறித்து தங்களிடமும் மாநில சர்க்கரை துறை ஆணையரிடமும், வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் அவர்களிடமும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இ.ஐ.டி. பாரி நிர்வாகத்தின் செய லைக் கண்டித்து விவசாயிகள் கரும்பு வெட்டுவதை நிறுத்தி வலு வான எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் இஐடி பரி ஆலை 25 நாட் கள் கரும்பு அறவை செய்ய வில்லை.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம், அம்பிகா, சித்தூர் ஆரூ ரான் சர்க்கரை ஆலைகள் விவசாயி களுக்கு 200 கோடி கரும்பு பணம் பாக்கி வைத்துவிட்டு விவசாயிகள் பெயரில் பலநூறு கோடி வங்கி களில் கடனை பெற்று மோசடி செய்து ஆலைகளை மூடிவிட்ட நிலையில், நெல்லிக்குப்பம் இ.ஐ.டி. பாரி ஆலை யும் இயங்காத நிலையில் 10.1.2020 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி அரசு அறித்த 1 சதவிகிதம் கரும்பு மட்டுமே கழிவு பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் உடனடியாக இ.ஐ.டி. பாரி நிர்வாகம் ஆலையில் அறவையை துவங்க வேண்டும் எனவும் உத்தர விட்டார்.
அதன்படி, இ.ஐ.டி. பாரி ஆலை 16.1.2020 அன்று அறவையை தொடங்கியது. மீண்டும் கொரோனா பாதிப்பால் ஆலை அறவையை நிறுத்தியது. 15.4.2020 முதல் ஆலை மீண்டும் செயல்படுகிறது. 1 சதவிகி தம்தான் கரும்பில் கழிவு பிடித்தம் செய்ய வேண்டும் என்ற ஆட்சியரின் உத்தரவை மீறி 3 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை பிடித்தம் செய்கி றார்கள். இதனால் ஆண்டுக்கு சுமார் 50,000 டன் கரும்பை விவசாயிகளிடம் அபகரிப்பு செய்கிறார்கள். இதனால் கரும்பு விவசாயிகள் மனவேதனை அடைத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரும், மாநில சர்க்கரைத் துறை ஆணையரும் நடவடிக்கை எடுத்து கூடுதலாக பிடித்தம் செய்த கரும்புக்கான கிரய பணத்தை விவ சாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும். மேலும் நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலையில் எடை மோசடி நடைபெறுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி எடை மோசடியை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. அப்போது தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், நிர்வாகிகள் ஆர்.சம்பத், பி.காந்தி, டி.எம்.ரவிக்குமார், ஆர்.திருமலை, பி.டி.ராமானுஜம் ஆகியோர் உடனிருந்தனர்.