tamilnadu

img

டி.கே.ரங்கராஜன் எம்.பி. நிதியுதவியால் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு

கடலூர், மார்ச் 9- கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் ராயர்பாளையம் ஊராட்சி யில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம், பயணியர் நிழற்குடை மற்றும் 2 இடங்களில் கருமகாரியம் மண்ட பங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கே.குணசுந்தரி லட்சுமணன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலை வர வேற்றார். மாநிலங்களவை உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன் சிறப்புரை யாற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், தமிழ்ச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் கே.அம்பிகாபதி, ஊராட்சி செயலாளர் என்.ரம்ஜான், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாத வன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.திருஅரசு, வி.உதய குமார், பண்ருட்டி ஒன்றியச் செய லாளர் கே.தனபால், அண்ணா கிராமம் ஒன்றியச் செயலாளர் ஆர்.லோகநாதன், பண்ருட்டி நகரச் செயலாளர் ஆர்.உத்திராபதி, நெல்லிக்குப்பம் பகுதிச் செயலாளர் எம்.ஜெயபாண்டியன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கிருஷ்ணன், முன்னாள் விவசாய சங்கத் தலைவர் எஸ்.துரைராஜ் மற்றும் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இராயர்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் டி.கே.ரங்கராஜனை உற்சாகமாக வர வேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்று திறப்பு விழா நிகழ்ச்சியை நடத்தினர்.
அதிகரிக்கும் வேலையின்மை
கட்டிடங்களை திறந்து வைத்து டி.கே.ரங்கராஜன் எம்.பி பேசுகையில், ‘இன்று பொருளாதார ரீதியாக மக்களுடைய வாங்கும் சக்தி வேகமாக குறைந்து வரு கிறது, புதிய தொழிற்சாலைகள் வரவே இல்லை. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் இ.ஐ.டி பாரி ஆலையில் 15 ஆண்டு களுக்கு முன்பு 4ஆயிரம் பேர் வேலை செய்தனர். ஆனால் இன்றோ 300 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். அதேபோல் நெய்வேலி என்எல்சி யில் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வேலை இல்லாதவரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது’ என்றார். மதம், சாதிய மோதல் வேக மாக பரவிக் கொண்டே இருக்கிறது. அது வளர்ச்சி அல்ல. நாட்டின் அழிவு. மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த இப்பகுதி மக்கள் பாடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.