tamilnadu

img

பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எல்ஐசி, வங்கி, ரயில்வே, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரி கட்சி கள் சார்பில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம், மாநிலக் குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், எஸ்.திருஅரசு, ஒன்றிய  செயலாளர்கள் கே.தனபால், ஆர் லோகநாதன், நகரச் செயலாளர் ஆர்.உத்திராபதி, சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம், மாவட்டச் செயலாளர் டி.துரை, மாநிலக் குழு உறுப்பினர் வி.குளோப், மாவட்டக் குழு உறுப்பினர் சக்திவேல், சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர் ஜி.தனவேல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சிகாமணி, புகழேந்தி,  எஸ்.ராஜசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.