tamilnadu

img

முறைகேடு சம்பவங்களில் ஈடபட்டு வரும் தீட்சிதர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த மாதம் ஆகம விதிகளை மீறி கோயில் தீட்சிதர்கள் ஆடம்பர திருமணம், கின்னஸ் நாட்டியாஞ்சலி என பல்வேறு முறைகேடு சம்பவங்களில் ஈடபட்டு வரும் தீட்சிதர்களை கண்டித்தும் கோயிலை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றி பாதுகாக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, பாமக சார்பில் சந்திரபாண்டியன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அறவாழி உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் அனைத்து கட்சிகளை சார்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.