காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை கண்டித்தும், முத்தலாக் தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், சிறுபான்மை மக்கள் மீதான தொடர் தாக்குதல்களை கண்டித்து தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் காட்டுமன்னார் குடி அருகே லால்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அஷ்ரப் அலி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் மூசா, மாவட்டச் செயலாளர் உதயகுமார், மாவட்டப் பொருளாளர் ராஜி, மாவட்ட துணைச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் ஜின்னா, மாவட்ட நிர்வாகிகள் அப்துல் காதர், அப்துல் அஜீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.