tamilnadu

img

கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிக ளுக்கு தேர்தல் நாளான ஏப்ரல் 18 அன்று அனைவருக்கும் விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்க வலியுறுத்தியும், வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ஏ.வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் டி. ரவீந்திரன், ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.