கடலூர், பிப். 22- கேஸ் விலை உயர்வைக் கண்டித்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் - சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கி உடனடியாக பணிகள் துவக்க வேண்டும், சமையல் கேஸ் விலை உயர்வை திரும்பபெற வேண்டும், நோய் பரப்பும் கொசு, நாய், பன்றி உள்ளிட்டவற்றை ஒழிக்க நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கம்மியம் பேட்டை குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்தும் பணி யினை துரிதப்படுத்த வேண் டும், தமிழக அரசு ஊராட்சி களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ள நிலையில் ஊராட்சி, நகராட்சி பகுதி களில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க உடனடியாக வடிகால் வாய்க்கால் கட்ட வேண் டும், கிடப்பில் போடப்பட் டுள்ள கடலூர் மாற்று புற வழிச்சாலை பணிகளை உடனடியாக துவக்க வேண்டும், நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் மாற்றுப் பேருந்து நிலையம் குண்டுசாலை பகுதியில் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண் டும், கோண்டூர் புறக்காவல் நிலையத்தை துவக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எம். மருதவாணன் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் புருஷோத்த மன், கிருஷ்ணமூர்த்தி, தேவநாதன், ரவிச்சந்திரன், முனுசாமி மணிவண்ணன், கலியசாமி, கண்ணபிரான், கோபால், காசிநாதன், ரமணி, கல்யாணகுமார், ராதா கிருஷ்ணன், பன்னீர் செல்வம், இளங்கோவன். ரங்கநாதன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட னர். பொருளாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.