பிஎஸ்என்எல் ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் கடலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் ஷை சந்தித்தனர். அப்போது, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். மாவட்டச் செயலாளர் ஐ.எம். மதியழகன், மாநில உதவிச் செயலாளர்கள் எஸ்.முத்துக்குமாரசாமி, ஏ.அண்ணாமலை , மாவட்ட துணைத் தலைவர் சி. பாண்டுரங்கன், மாவட்டப் பொருளாளர் பி.சந்திரசேகரன், மாவட்ட உதவி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.