tamilnadu

img

நூல் வெளியீட்டு விழா

கடலூர்,பிப்.16-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடலூரில் நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை (பிப். 15) நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கேத்தரின் தலைமை தாங்கினார். பிரவீன் வரவேற்றார், நிகழ்ச்சியை கவிஞர் பால்கி ஒருங்கிணைத்தார். கவி.வெற்றிச்செல்வி சண்முகம் எழுதிய ”குடை தேசத்தில் மழை விற்பவள்” என்ற நூலையும், சாகித்திய அகாதமி விருதாளர் குறிஞ்சி வேலன் பல்லவி குமார் எழுதிய ”ஹைபுன் வெளி ச்சம்” என்ற நூலையும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் ஏகாதசி வெளியிட கவிஞர் கனிமொழி, கவி.வெற்றிச்செல்வி ஆகியோர்  நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.  நூல்கள் குறித்து எழுத்தாளர் ஆசைதம்பி, எழுத்தாளர் தில்லையாடி ராஜா ஆகியோர் பேசினா ர்கள்.  நிகழ்ச்சியில் கவிஞர் முருகேஷ், சுப்பிரமணி, நிவேதா பதிப்பகம் தேவகி ராமலிங்கம், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் உதயகண்ணன்  ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். செம்மலர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.