கடலூர், மே 17 -
சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் 100 தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் நம்மதான் கடலூர் என்ற அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கான கட்டணத்தை தொழிலாளர்களே செலுத்த தயாராக உள்ளனர். எனவே, சவுதி அரேபியாவில் உள்ளவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.