districts

இஸ்லாமியர்களுக்கு அடக்கஸ்தலம் ஆட்சியரிடம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி ஜூன் 25- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்தில் புது மோட்டூர், செட்டியூர், பந்தரப்  பள்ளி, முதுகாம்பட்டி, பனங்காட்டூர் உப்பட  சுற்றுப்புற கிராமங்களில் 120க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன இவர்க ளுக்கு என்று தனி இடுகாடு வசதிஇல்லை. இதனால் அவர்கள் இந்த கிராமங்களிலி ருந்து சுமார் நான்கு கிலொமீட்டர் தூரத்தில் உள்ள புலியூருக்கு நடந்து சென்று அங்குள்ள இடுகாட்டில்தான் புதைக்க வேண்டி யுள்ளது. சில நேரங்களில் அங்கும் புதைப்ப தற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அத்த கைய நேரங்களில் உடலை அடக்கம் செய்வ தில் கடும் சிக்கல் ஏற்படுகிறது. புது மோட்டூர் அருகில் இஸ்லாமியர்க ளுக்கான மசூதி உள்ளது. இதன் அருகில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. எனவே  அந்த இடத்தை இஸ்லாமிய மக்களுக்கு சுடுகாடு அமைக்க ஒதுக்கித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.