tamilnadu

img

ஒடிசாவில் கல்வி நிறுவனங்கள் நவம்பர் 30 வரை மூடப்படுகிறது

ஒடிசாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் நவம்பர் 30 வரை மூடப்படுகிறது. ஆனால், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு நவம்பர் 16 முதல் மீண்டும் திறக்கப்படும் என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அடிப்படையில், கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் ஊரடங்கை தளர்க்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீடிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
அதில், நவம்பர் 30 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும். இருப்பினும், பள்ளிகள் மற்றும் கல்வித்துறை கட்டுப்பாடுகள் போன்ற மேற்பார்வையின் கீழ் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் நவம்பர் 16 முதல் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி திறப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொற்று அதிகமாக உள்ள கட்டுப்பாடு மண்டலங்களுக்குள் ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது. கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச விமானப் பயணம் நவம்பர் 30 வரை தொடர்ந்து செயல்படுகிறது. அரசியல் நிகழ்வுகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டு கூடங்கள் என அனைத்தும் நவம்பர் 30 வரை தடை தொடர்கிறது.