tamilnadu

img

ஜூலை 18ல் நம்பிக்கை வாக்கெடுப்பு

பெங்களூரு, ஜூலை 15 - கர்நாடக சட்டப்பேரவையில் ஜூலை 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று, சபாநா யகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமார சாமி முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக இருக்கிறார். ஆனால், கடந்த இரண்டு வாரமாக, கர்நாடக ஆளும் கூட்டணிக்குள் உச்சக் கட்ட குழப்பம் நிலவி வருகிறது. ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதில் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக-வுக்கு  ஆதரவளிப்பதாக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து கடிதம் கொடுத்த னர். மேலும் மஜத-வை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் மும்பையில் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

எனினும், இவர்களில் 10 பேரின் ராஜினாமா கடிதத்தில் போதிய விளக்கம் இல்லை என்று கூறி, அந்த ராஜினாமாக்களை, சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டார்.  எம்எல்ஏ-க்களோ, தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றமும் இம்மனுவை விசாரித்து, ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டது. ஆனால், தனது முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி சபாநாயகர் ரமேஷ் குமார், உச்ச  நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசா ரித்த உச்சநீதிமன்றம், எம்எல்ஏ-க்கள் ராஜினாமா முடிவுகளின் மீது, ஜூலை 16-ஆம் தேதி வரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே, கர்நாடகா சட்டப்பேர வை கூடவுள்ளதால், அதற்கு முந்தைய அலுவல் ஆய்வுக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. சபாநாயகர் தலைமை யில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை  முதல்வர் பரமேஸ்வர், எதிர்க்கட்சி தலை வர் எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டம் தொடங்கி யதுமே வேகமாக எழுந்த பாஜக தலைவர் எடியூரப்பா, அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக சபாநாயகரிடம் மனு அளித்தார். தங்களின் தீர்மானத்தை உடனடியாக நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  சபாநாயகரும் இதனை ஏற்றுக் கொண்டு, ஜூலை 18-ஆம் தேதி காலை  11 மணிக்கு குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.