tamilnadu

img

வட தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்.17- வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த  24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. மேற்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட மாவட்டங்களான திரு வள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ண கிரி, வேலூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மாக அரியலூர் மாவட்டம் திருமானூரில் 11 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாலை  அல்லது இரவில் நகரின் சில பகுதிகளில்  லேசானது முதல் மிதமான மழைக்கு  வாய்ப்பு இருப்பதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

;