தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மறுப்பு
திருப்பூர், ஜூன் 19 – கோவிட் 19 (கொரோனா) கிருமித் தொற்று சூரிய கிரகணத்தால் உருவாவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் உண்மை யல்ல, அது வெறும் வதந்தி என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட அறிவியல் பிரச்சார உபகுழு மறுப்புத் தெரி வித்துள்ளது. இது குறித்து அறிவியல் இயக்கத்தின் அறிவியல் பிரச்சார உபகுழு சார்பில் கௌரி சங்கர் வியாழனன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் சில செய்தித்தாள்களிலும், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் கோவிட் 19 (கொ ரோனா) கிருமித் தொற்று சூரிய கிரகணத்தால் பரவியதாக தகவல் பரவி வருகிறது. குறிப் பாக 2019 டிசம்பர் 26ஆம் தேதி உருவான சூரிய கிரகணம் காரணமாக கோவிட் 19 கிருமி உருவானதாகவும், வரும் ஜூன் 21ஆம் தேதி நிகழ இருக்கும் சூரிய கிரகணத் தால் கோவிட் 19 தொற்று நீங்கிவிடும் என்றும் அணு விஞ்ஞானிகள் கூறியிருப் பதாக செய்தி வெளியானது.
இது உண்மையல்ல, குறிப்பாக பூமி, சந் திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமையும்போது பூமியின் சில இடங்களில் பார்க்கும்போது, சந்திரன் ஒரு குறுகிய காலத் திற்கு சூரியனுக்கு முன்னால் வரும்போது, சூரிய கிரகணங்கள் ஏற்படுகின்றன. ஒவ் வொரு ஆண்டும் 2 முதல் 5 முறை சூரிய கிரகணங்கள் பூமியின் ஏதாவது ஒரு பகுதி யில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் பூமியில் உள்ள நுண்ணுயிர்கள் தாக் கத்தை ஏற்படுத்தாது. எனவே சூரிய கிரகணத் தால் கோவிட் 19(கொரோனா) கிருமித் தொற்று பரவியிருப்பதாக கூறுவது உண்மை யல்ல, வதந்தியாகும் என்றார். மேலும், இந்த வதந்தியை இந்திய விஞ்ஞா னிகள் கூட்டமைப்பினரும் மறுத்துள்ளனர்.எனவே பொது மக்கள் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்று அறிவியல் இயக்கத்தின் அறிவியல் பிரச்சார உபகுழு கேட்டுக் கொண் டுள்ளது.