tamilnadu

img

வாலிபர் சங்க கேரள மாநில தலைவர்கள் அசோக் குடும்பத்தை சந்தித்து ஆறுதல்

திருநெல்வேலி, ஜூன் 17- நெல்லை கரையிருப்பில் சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தோழர் அசோக்கின் குடும்பத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கேரள மாநில தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். நெல்லை கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ நகரில் உள்ள தோழர் அசோக்கின் இல்லத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கேரள மாநில தலைவர் எஸ்.சதீஷ், மாநில செயலாளர் ஏ.ரஹீம், மாநில துணை தலைவர் கே.யு.ஜெனிஷ் , தமிழ் மாநில தலைவர் என். ரெஜீஸ்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் எம்.சுடலைராஜ், ராஜகுரு, இந்திய   ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத்   தலைவர் மேனகா, மாவட்டச் செயலாளர் பி.உச்சிமாகாளி ஆகியோர் அசோக்கின் தாயார் ஆவுடையம்மாள், அவரது தந்தை முருகன், அவரது சகோதரர்கள் மணிகண்டன் , சதிஷ் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கநெல்லை  மாவட்ட நிர்வாகிகள் க. ஸ்ரீராம், முருகேசன், கருணா, கவுதம், வில்சன் ,கொம்பையா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.