tamilnadu

img

தமிழகத்தில் பாதிப்பு 67 ஆனது

தமிழகத்தில் திங்களன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 பேரில் இருந்து 67 பேராக அதிகரித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் 10  பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

நோயாளி 51:  ஆண் 25 வயது (கொரோனா பாதித்த நோயாளி 12-ன் குடும்ப உறுப்பினர்) மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி.

நோயாளிகள் 52 - 55 :அமெரிக்காவில் இருந்து திரும்பிய நோயாளி 42 உடன் தொடர்பில் இருந்த சென்னையைச் சேர்ந்த 4 நான்கு பேர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (52 வயது பெண்மணி, 76 வயது பெண்மணி, 15 வயது பெண், 20 வயது ஆண்)

நோயாளிகள் 56 - 65: (10 ஆண்கள்) அனைவருமே ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். அனைவரும் தில்லி சென்று வந்துள்ளனர். தாய்லாந்தைச் சேர்ந்த நோயாளிகள் 5 மற்றும் ஆறுடன் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

நோயாளி 66: பெண்மணி - 50 வயது. சென்னை பாரிமுனையைச் சேர்ந்தவர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோயாளி 67: ஆண் - 42 வயது. குளித்தலையைச் சேர்ந்தவர். தில்லிக்குச் சென்று வந்தவர். கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.