சென்னை, நவ. 30- பாபா அணு ஆராய்ச்சி மையமும் இந்திய அணு மின் கழகமும் இணைந்து மும்பையில் உள்ள ஹோமி பாபா தேசிய நிறுவனத்தில் சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றை அண்மையில் நடத்தின. இந்தக் கருத்தரங்கில் அணு மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களில் ஒன்றான மென்னீர் உலைகள் குறித்து விரிவாக விவா திக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை கள் உயர்அழுத்த கனநீர் அடிப்படையிலான தொழில் நுட்பத்தில் செயல்படுபவை. மேலும், புதிதாகக் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள சில அணு உலைகளும் இந்த தொழில்நுட்பத்தின் கீழ் இயங்குபவையே. இந்நிலையில், மற்றொரு தொழில்நுட்பமான - மென்னீர் அடிப்படையிலான அணு உலைகளை வரும் நாட்களில் அமைப்பதன் சாத்தியம் குறித்து இக்கருத்தரங்கில் பேசப்பட்டது.
அதோடு, “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ், இந்தியா விலேயே இந்த மென்னீர் அணு உலைகளை உருவாக்கு வது குறித்தும், அதில் உள்ள சவால்கள், அதற்கான சாதக அம்சங்கள் குறித்தும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற வர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். மேலும், இந்தத் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் பங்களிக்கும் நிறுவனங்கள், தங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய அரசின் அணு மின்சக்தித் துறைத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள், இந்திய அணுமின் சக்தி ஒழுங்காற்று ஆணையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், ஹோமி பாபா தேசிய நிறுவனம் உள்ளிட்ட இத்துறை தொடர்பான மற்ற பல நிறுவனங்க ளின் உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றனர். இவர்களோடு, மற்ற நாடுகளின் அணுமின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களும், நிர்வாகி களும் இடம்பெற்றனர்.