சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை,ஜன.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க. பால பாரதியிடம் கரூர், மணவாசி சுங்கச்சாவடி யில் தரக்குறைவாகவும், மிரட்டல் தொனி யிலும் நடந்து கொண்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தேசிய நெடுஞ்சாலைத் துறை மண்டல அதிகாரிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள மண்டல அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், திண்டுக் கல் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவரு மான க.பாலபாரதி கடந்த ஜனவரி 18 மாலை 3.30 மணியளவில் திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கு கட்சிப் பணி நிமித்தமாக ஒரு காரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப் போது கரூர் அருகேயுள்ள மணவாசி சுங்க சாவடியில், சுங்கச்சாவடிகளுக்கு இடையில் உள்ள தூரம் மற்றும் சுங்கத் தொகை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால் அங்கு பணியில் இருந்த வர்கள் அவர் எழுப்பிய கேள்விகள் எதற்கும் விளக்கம் அளிக்காமல் முரட்டுத்தன மாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசி யுள்ளனர். கார் ஓட்டுநர் மற்றும் சுங்க ஊழி யர்களுக்கிடையே வாக்குவாதம் நடை பெற்று இருக்கிறது. சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர் கூட்டமாக இணைந்து கொண்டு கூச்ச லிட்டுள்ளனர். அப்போது, அலுவலகத்தி லிருந்து ஒருவர் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு இவர்களோடு இணைந்து கொண்டு மோசமான முறையில் நடந்து கொண்டுள்ள னர்.
ஒரு பொது இடத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடமே, அநாகரீகமாவும், மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்துகொண்டவர்கள் சாதாரண மக்களிடம் சுங்கச்சாவடியில் பணியற்றுபவர்கள் எப்படி நடந்துகொள் வார்கள் என்பதை புரிந்து கொள்வது கடின மல்ல. இதே மணவாசி சுங்கச்சாவடியில் கடந்த காலங்களில் பலமுறை வாகனங் களில் பயணம் செய்வோர்களிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் தகராறு செய்துள்ள சம்பவங்கள் தங்களது கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன். எனவே மணவாசி சுங்கச்சாவடியில் சம்பவத்தன்று பணியில் அத்துமீறி நடந்து கொண்டவர்கள் மீது தாங்கள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்துகிறேன். மேலும் பொதுவாகவே சுங்கச் சாவடி நிர்வாகங்களில் அணுகு முறையை ஒழுங்குபடுத்துவதும் அவசியத் தேவை என சுட்டிக் காட்டுகிறேன். இது குறித்து தாங்கள் மேற்கொண்ட நடவடிக் கையை எனக்கு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.