tamilnadu

img

கண்காணிப்பு கேமராக்கள்: திமுக வழக்கு

சென்னை,டிச.27- ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு, வாக்குப் பெட்டிகள் வைக்கும் இடங்  களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த  உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக அமைப்புச்  செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல்  செய்துள்ள மனுவில், தேர்தலில் பயன் படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண் டும், அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இந்த மனு வரும் திங்கட் கிழமை விசாரணைக்கு வருகிறது.

;