tamilnadu

img

எட்டு வழிச்சாலையை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய அரசின் மேல்முறையீட்டை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்

எட்டு வழிச்சாலையை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய அரசின் மேல்முறையீட்டை திரும்பப் பெற வலியுறுத்தி செவ்வாயன்று தருமபுரி பாப்பம்பாடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்குமார், சிபிஎம் வட்டச் செயலாளர் சி.வஞ்சி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தீர்த்தகிரி, மனோகரன், சொக்கலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.