அடுத்தடுத்த வீட்டில் உள்ள 6 பேருக்கு கொரோனா
சென்னை பல்லவன் சாலையில் அடுத்தடுத்த இரண்டு வீட்டில் உள்ள 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 மருத்துவர்களுக்கு கொரோனா
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆண்கள் விடுதியில் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு: 31 பேருக்கு கொரோனா தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று (மே 9) 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 30 பேர் கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஆவர். இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 215 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 49 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 162 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 பேர் இறந்துள்ளனர்.
திருவள்ளூர்: 41 பேருக்கு கொரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும்41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மாவட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 270 லிருந்து 315 -
ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 53 பேர் குணமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெமிலி பகுதியில் மேலும் 6 பேருக்கு கொரோனா
அரக்கோணம் அடுத்த நெமிலி கரியாகுடலில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்த 6 பேரும் சென்னை கோயம்பேடு சென்று திரும்பியவர்கள் ஆவார்.
காவலர் மனைவி மகளுக்கு கொரோனா
சென்னையை பூந்தமல்லி சப்ஜெயிலில் சர வணக்குமார் என்ற காவலர் பணியாற்றி வந்தார். அங்கு சமையலுக்கான காய்கறி வாங்க கோயம்பேடு சென்று வந்து கொண்டிருந்தார். அவருக்கு செய்யப்பட்ட பரி சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. அவரது மனைவி 9 மாத கர்பிணியான பிரியா வுக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களது மகள் சுஜர்னாவுக்கு (வயது 12) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.
மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா
சென்னை பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம்: வடமாநில தொழிலாளர் 4 பேருக்கு கொரானா தொற்று
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தனியார் விடுதி மற்றும் லாட்ஜ்களில் தங்கியிருந்து பூட்டு, பெல்ட், துணி உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வந்த னர். ஊரடங்கு காரணமாக சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள தனி யார் விடுதியில் தங்கி இருந்த 4 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: 17 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 114-ஆக உயர்ந்துள்ளது.
ஒரு லட்சம் பிசிஆர் கிட்டுகள்
தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் ஆர்டி-பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 10 லட்சம் ஆர்டி-பிசிஆர் சோதனைக் கருவிகள் வாங்க தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.