tamilnadu

img

தியாகி நாவலன் நினைவு தினம் : தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

குடவாசல்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற போராளி தியாகி ஜெ.நாவலனின் 9 ஆவது நினைவு தின அஞ்சலி மற்றும் நினைவு பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் கடைவீதியில் நடைபெற்றது.ஞாயிற்றுக்கிழமை மாலை பேரளத்தில் உள்ள திருமீயச்சூரில் தியாகி நாவலன் நினைவாக எழுப்பப்பட்ட ஸ்தூபியில்மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், தியாகி ஜெ.நாவலன் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நாகைமாவட்ட செயலாளர் நாகை மாலி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமாரராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், நா.பாலசுப்பிரமணியன், எம்.கலைமணி, கே.தமிழ்மணி மற்றும் சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஐ.முகமது உதுமான் மற்றும் கட்சி மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலிசெலுத்தினர்.

;