சென்னை, நவ. 20- கோவில் நிலங்களில் குடியிருப் போருக்கு பட்டா வழங்க கோரி நவ. 26-ல் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் செவ்வாயன்று (நவ.19) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்தும், விவசாயம் செய்தும் வியாபாரம் செய்தும் வாழ்ந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளும் இந்த கோரிக்கையை பல ஆண்டுகாலமாக வலியுறுத்தி பல கட்ட போராட்டங் களை நடத்தி வந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்திற்கு அடி பணிந்து லட்சக்கணக்கான குடும்பங் களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கூடிய உத்தரவை திரும்ப பெற இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக அரசு கோவில் நிலங்களில் குடியிருக்கக் கூடிய மக்களுக்கு அந்த இடத்தை சொந்த மாக்கும் வகையில் தொடர்ந்து நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டு மென்றும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் மக்களின் சார்பில் நின்று உறுதியாக நடத்திட வேண்டு மென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. 2019 நவம்பர் 26 அன்று மாவட்ட தலைநகரங்கள் மற்றும் வட்ட தலைநகரங்களில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் வீட்டு மனைப்பட்டா கேட்டு மக்கள் மனு கொடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேலவளவு படுகொலையில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிப்பதா?
மதுரை மாவட்டம், மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் 1997ல் ஜூன் 30ஆம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். சாதிய வெறியுடன் பட்டப்பகலில் நடத்தப்பட்ட கொடூரமான கொலையாகும் இது. இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 4 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போது நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதாக கூறி மீதமுள்ள 13 பேரும் கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கொடூரமான சாதிவெறி அடிப்படையிலான படுகொலையில் தண்டிக்கப்பட்ட 13 பேரை தமிழக அரசு சர்வசாதாரணமாக விடுவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவர்களது விடுதலையை ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.