tamilnadu

img

கிராம மக்களுக்கு நிவாரணம்

கல்பாக்கம் அணுமின் நிலையத்திடம் கோரிக்கை

செங்கல்பட்டு, ஏப்.23- திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார கிராம மக்களுக்கு கல்பாக்கம் அணு மின் நிலை யத்திலிருந்து நிவாரண உதவி களை மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செயலா ளர் இ.சங்கர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் வருமாறு:-

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் அணுமின் நிலையம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரு கின்றது. இந்த அணுமின் நிலை யத்தைச் சுற்றியுள்ள 16 கிலோ  மீட்டர் தொலைவில் உள்ள கிராம  மக்களுக்குத் தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதி களைச் செய்து வருகின்றது. தற்பேது பரவிவரும் கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக மத்திய மாநில அரசு கள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கால் கிராமப்புற மக்கள்  வாழ்வாதாரத்தை இழந்துள்ள னர். இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையம் தனது நிறு வனத்தைச் சுற்றியுள்ள 16 கி.மீ தொலைவில் உள்ள கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய முன் வந்துள்ளது.

இந்நிலையில் உரிய முறை யில் நிவாரணம் பெறும் பயனாளி களைக் கண்டறிந்து கல்பாக்கம் அணுசக்தி நிறுவனத்திட மிருந்து கொரோனா பேரிடர் கால நிவார ணத்தைப் பெற்றுத்தர நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இ.சங்கர் வலி யுறுத்தியிருக்கிறார்.