கிருஷ்ணகிரி, மே 4- இந்த வைரஸ் தாக்கத்தை விட கொடூர மாக ஏழை எளிய மக்களை பசிக் கொடுமை வாட்டி வருகிறது. இக்கட்டான சூழலுக்கு நடுவில் தோழமை சங்கங்கள் உதவியுடன் கிருஷ்ணகிரி மாவட்ட மாதர் சங்க நிர்வாகி கள் நிவாரணப் பொருள்கள் சேகரித்து மக்க ளுக்கு வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,தமிழ்நாடு அறி வியல் இயக்கம், நிழல் அறக்கட்டளை உதவி யுடன் மத்திகிரி குதிரைபாளையத் தில் ரூ. 500 மதிப்பிலான உணவுப் பொருள்கள் தொகுப்பு 100 குடும்பங்களுக்கு வழங்கப் பட்டது.
இதில் தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சிவ குமார், நிழல்கள் அறக்கட்டளையின் நிறுவ னர் கண்மணி, பூபாலகண்ணன், சகஸ்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தலைவர் வெண்ணிலா, நிர்வாகிகள் புனிதா, நித்யா, முனியம்மா, மார்க்சிசிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் பிஜி மூர்த்தி, வட்டக் குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மத்திகிரி பகுதியில் மாவட்டத் தலைவர் வெண்ணிலா, நிர்வாகிகள் புனிதா, முனி யம்மா, நித்யா ஆகியோர் 60 ஏழை குடும்பங்க ளுக்கு முககவசம், பால், பிஸ்கட் வழங்கி னார்கள்.