tamilnadu

img

டிச.23 சென்னையில் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக!

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை, டிச. 18 - குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி டிச.23 அன்று சென்னையில் “குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி” நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் புதனன்று (டிச.18) அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக), ஜி.ராமகிருஷ்ணன், கே.பால கிருஷ்ணன் (சிபிஎம்), இரா.முத்தரசன், மு.வீரபாண்டியன் (சிபிஐ), கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்), வைகோ, மல்லை சத்யா (மதிமுக), தொல்.திருமாவளவன், து.ரவிக்குமார் (விசிக),கலி.பூங்குன்றன் (திக), காதர்மொய்தீன் (இ.யூ.முஸ்லீம் லீக்), கே.எம்.ஜவாஹிருல்லா, அப்துல்சமது (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) ஜெயசீலன், எஸ்.எஸ்.வெங்கடேசன் (ஐஜேகே)  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் கூறியிருப்ப தாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக்கு எதிரானது. இந்த சட்டத் திருத்தத்தால் இஸ்லாமிய சிறுபான்மை மக்களும், இலங்கைத் தமிழர்களும் குடியுரிமை பெற இயலாது. இச்சட்டத்திற்கு எதிராக போராடிய தில்லி ஜாமியா, உத்தரப்பிரதேச அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினரும், காக்கி சீருடையில் அழைத்து வரப்பட்ட சமூக விரோதக் கும்பலும் கொடூர மான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளதற்கு இந்த கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. மாணவர்களின் அறவழிப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப் படுகிறது.

முற்போக்கு அடையாளம்

கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வெளிப்படையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். கேரளாவில் ஆளுங்கட்சியின் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாகப் பங்கேற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், இந்நாட்டில் பாசிச சக்திக்கெதிராக ஜனநாயக சக்திகள் ஓர் அணியில் சேர வேண்டிய தேவையையும் அவசர - அவசியத்தையும் வலி யுறுத்தும் முற்போக்கு அடையாள மாக அமைந்திருப்பது வரவேற்கத் தக்கது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்களை தவிர்த்து, இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தின ருக்கு குடியுரிமை இந்தச் சட்டத் திருத்தம் வகை செய்கிறது. ஆனால், இலங்கையிலிருந்து குடி யேறியுள்ள தமிழர்களை ஏற்றுக் கொள்ள மறுப்பது, பாஜக அரசின் மதவாதம் மட்டுமல்ல, அப்பட்டமான தமிழின விரோதப் போக்காகும்.

பச்சைத் துரோகம்

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களைப் பாதிக்கும் இந்த திருத்தச் சட்டத்தை எதிர்க்காமல், இரு அவை களிலும் அதிமுக ஆதரித்து வாக்களித் துள்ளது. இது இலங்கைத் தமிழர்களுக்கு செய்திருக்கும் பச்சைத் துரோகம். இதை சரித்திரம் மறக்காது, மன்னிக்காது. மாநி லங்களவையில் இந்த சட்டமசோதா நிறை வேறுவதற்கு அதிமுக-வின் 11 உறுப்பி னர்களும், பாமக-வின் ஒரு உறுப்பினரும் அளித்த வாக்குகள்தான்  காரணம். இதன் மூலம் பாஜக அரசின் கைப்பாவையாக அடிமை அதிமுக கூட்டணி செயல்பட்டு வருவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு, மசோதாவை ஆதரிக்க கேட்ட தால் வாக்களித்ததாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினரான எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் வெளிப்படையாகத் தெரி வித்திருக்கிறார். அதிமுக எப்படி ஆட்டி வைக்கப்பட்டு வருகிறது, அதிமுகவும் மனமு வந்து எப்படியெல்லாம்,  தலையாட்டி வருகிறது  என்பது தெளிவாகத் தெரிகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவின் அமைதி சீர்குலைந்து, மத நல்லிணக்கம் சிதைந்து, பயமும் பதற்றமும் அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்க ளிலும் தலைநகர் தில்லியிலும் இன்னும் பல பகுதிகளிலும், மக்களின் அச்ச உணர்வு, போராட்டமாக மாறியுள்ளது. அசாம் தலை நகர் கவுகாத்தியில் நடைபெறவிருந்த இந்திய பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது.

உலகளவில் எதிர்ப்பு

இந்தியா வரவிருந்த வங்கதேச அமைச்ச ரும் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது அருணாசலப்பிரதேசம், மேகாலயா மாநிலங்களுக்கான பயணங்களை ரத்து செய்திருக்கிறார். பல நாடுகள் தங்கள் குடி மக்களை இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளன. உலகளாவிய அமைப்புகள் பலவும் மற்றும்  1067க்கு மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர்களும், இந்த மதவாத சட்டத் திருத்தத்திற்கு கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாழ்படுத்திடும் வகையில் நிறைவேற்றப் பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டமும், அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசு மேற் கொள்ளவிருக்கும் குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதும், சொந்த மண்ணிலே வாழும் சகோதரர்களை அகதிகளாக்கி, அவர்களை அந்நியப் படுத்திக் கொடுமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளுமாகும்.

இந்துக்களும் பாதிப்பு

ஏற்கனவே, அசாமில் நடத்தப்பட்ட குடிமக்கள் பதிவேட்டுக்கான பதிவில், கார்கில் போர் வீரரையே அந்நியராகப் பதிவு செய்து கைது செய்த கொடுமைகள் நடந்துள்ளன. முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல லட்சம் இந்து மக்களும் அசாமில் எதிர்காலம் தெரியாமல் தத்தளிக்கின்றனர். இந்நிலையில், மதவாத மற்றும் இன வாதக் கண்ணோட்டத்துடனும், இலங்கைத் தமிழர்களைப் புறக்கணித்திடும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை அனைத்துக் கட்சிக்கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் முதலில் “அமைதி நிலவ வேண்டும்” என்ற நல்லெண்ணத்துடன், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து வரும் மத்திய பாஜக அரசுக்கும், அதன் திட்டத்தின்படியே செயல்பட்டு, இலங்கைத் தமிழர்களுக்கும், சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்தினருக்கும் துரோகம் இழைத்த மாநில அதிமுக அரசுக்கும் எதிர்ப்பைத் தெரிவித்து டிச.23 அன்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில், சென்னையில் “குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி” நடைபெறும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.