tamilnadu

img

அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் : அமைச்சா் கடம்பூா் செ.ராஜு  


கொரோனா பாதிப்பு தடுப்புக்காக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூா் ஆகிய இடங்களில் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட முகக் கவசம், சோப்பு ஆயில், லைசால், கை கழுவும் திரவம் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய விற்பனை அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார் . அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கொரோனா அங்காடியை திறந்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.  

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது; கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற நிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்ந்து எடுத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மக்கள் தனித்து இருக்க வேண்டும். அதை பின்பற்றுவதற்காகத்தான் அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதை மக்களுக்கு எடுத்துக்கூறுவதற்காகத்தான்  ஊடகங்களும் தினமும் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு தான் மிக அவசியம் என்றாவா.