tamilnadu

img

காவி கும்பலுக்குத் துணைபோகும் காவல்துறை

பெரியாரிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக. 22 – உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பொது இடங்களில் பிள்ளையார் சிலை வைத்த காவி கும்பலுக்கு காவல்துறையினர் துணைபோவ தாகக் குற்றம்சாட்டி கோவையில் பெரியாரிய முற்போக்கு அமைப் புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். உயர்நீதிமன்றத் தடையை மீறி கோவையில் பொது இடங்களில் பிள்ளையார் சிலைகளை வைத்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு சட்ட விரோதமாக வைக்கப்படுள்ள பிள்ளையார் சிலை களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், சிலை வைக்கத் துணை போகும் காவல்துறை யைக் கண்டித்தும் கோவை காந்தி புரத்தில் பெரியாரிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  பெரியார் சிலை முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட் டிணன் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி.கலைய ரசன், திராவிடர் கழக செயலாளர் நேருதாஸ், தமிழ்ப்புலிகள் இள வேனில் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;