tamilnadu

img

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு

சென்னை,ஜூலை 31- கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் சுமார் ரூ. 279  கோடியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுக் கட்டி டங்களை காணொலிக் காட்சி மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி  தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில், கரூர் மாவாட்டம் காந்தி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முத லமைச்சர் திறந்து வைத்தார். 17.45 ஏக்கர் பரப்பில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்து வமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆறு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவக் கல்லூரியில் 150 மாண வர்கள் படிக்க முடியும். மருத்துவமனையில் 800 படுக்கை  வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  ரூ. 75.79 கோடி மதிப்பில் 3.20 லட்சம் சதுர அடி பரப்பில்  வகுப்பறை கட்டடங்களும் ரூ. 122 கோடியில் 5.58 லட்சம்  சதுரஅடி பரப்பில் மருத்துவமனைக் கட்டடங்களும் கட்டப்  பட்டுள்ளன. மாணவர்கள் தங்கும் விடுதி ரூ. 71 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.