tamilnadu

img

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சென்னை,ஜூலை 20- தமிழகத்தில் நாசவேலைக்கு திட்டம் தீட்டி கைது செய்யப்பட்ட, பல்வேறு மாவட்டங்களில் உள்ள 16 பேர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமையன்று சோதனை மேற்கொண்டனர். “அன்சருல்லா” என்ற புதிய அமைப்பை தொடங்கி சதி வேலைக்கு முயன்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ள 16 பேர் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள்  விசாரணையை தொடங்கியுள்ளனர்.  இந்த நிலையில் சனிக்கிழமையன்று 16 பேரின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை, தேனி, நெல்லை  மேலபாளையம், திருவாரூர் முத்துப் பேட்டை, இராமநாதபுரம் உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது.

;