tamilnadu

img

உள்ளாட்சி தேர்தல்: 3,217 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை,டிச.10- தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடு வதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9 அன்று  தொடங்கியது. முதல் நாளில் 3,217 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகரிகள் கூறுகையில், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் வேட்புமனு தாக்கல் சூடு பிடிக்கவில்லை என்றனர்.  முதல் நாளில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,834 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 333 பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.