tamilnadu

img

தொழிற்சாலை கழிவால் மாசடையும் ஏரி

கிருஷ்ணகிரி, ஜூலை 29- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் சிகரலப்பள்ளி ஊராட்சியில் தண்ணீர் பள்ளம் கிராமத்தில் தனியார் பழச்சாறு தொழிற்சாலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஆலையின் அரு கில் கோடியூர் ஏரியும், சிக ரலப்பள்ளி, கோடியூர், சின்னபொன்னாம்பட்டி, சிவபுரம், மாமரத்துக் கொட்டாய், செல்ல பெண்டா, பொங்கன்செருவு உட்பட பல கிராமங்களும் உள்ளன. பழச்சாறு தொழிற் சாலையின் மாசடைந்த தண்ணீரும், கழிவு நீரும் கால்வாய் மூலம் கோடியூர் ஏரியில் விடப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசு அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகம், மாசுக் காட்டுப்பாட்டு அலுவலகம்,  பொதுப்பணித் துறை என  அனைத்து துறையிலும் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஏரி நீர் மாசடைந்து, அதில்  இருந்து துர்நாற்றம் வீசுகி றது.  மேலும் சுற்றுப்புற கிரா மங்களின் நிலத்தடி நீரும் மாசடைந்து சாம்பல் நிறமாக  மாறியுள்ளது. பெண்கள், முதியவர்கள், குழந்தை களுக்கு சொறி, சிரங்கு, ஒவ்வாமை ஏற்படுகிறது. மக்களை நோய்களில் இருந்து பாதுகாக்கவும், குடிநீர் ஆதாரத்தை பாது காக்கவும் ஏரியில் தொழிற் சாலை கழிவுகள் கலப்பதை தடுத்து, ஏரியை தூர்வாரி பாதுகாக்க மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கிராம மக்க ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.