tamilnadu

img

ஊர்காவல்படை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை  - நீதி கேட்டு போராட்டம்

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து முன்னாள் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவரே, அதே பகுதியைச் சேர்ந்த  சேகர், செல்வமணி, முருகானந்தம், பிரபாகரன் உள்ளிட்ட 4 பேர் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த மாதம் 19 ஆம் தேதி கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாவிடம் புகார் கொடுத்துள்ளார். 

இதுவரையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த காவல்துறையினர் சாலையில் அமர்ந்து போராடியவரை  இழுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.