tamilnadu

img

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம்

மதுரை,மே 28- ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் எவ்வித கட்டுப்பாடுகளு மின்றி டீ, காபி கடைகள் இயங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று  கோரி  விருதுநகர்  மாவட்ட டீ, காபி, ஸ்வீட், காரம் கடை உரிமையாளர்கள் சங்கத்தின்  செயலாளர் தங்கராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு முன்பு நடைபெற்றது. அரசு சார்பில் ஆயிரம் கே .செல்வகுமார் வாதிட்டார். மனுதாரர் தரப்பில், டீக்கடைக்காரர்களின் நலனுக்காக கட்டுப்பாடுகளை தளர்த்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் நீதிபதிகள் கூறுகையில்,கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.