tamilnadu

img

போலீஸ் தாக்கி 4 பேர் பலியான சம்பவங்களையும் விசாரித்திடுக!

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வியாபாரிகள் விவகாரத்தில் தவறு செய்த காவலர்களை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத் துள்ளார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 22-ம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். காவலர்கள் தாக்கியதால் அவர்கள் உயிரிழந்தனர்.இந்த நிலையில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்களன்று (ஜூன் 29) காங்கிரஸ் கட்சி சார்பில் இறந்தவர்களின் குடும்பத் துக்கு ரூ.10 லட்சம் நிதியினை வழங்கினார்பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, அரசு மற்றும் காவல் துறை தரப்பில் வியாபாரிகள் உயிரிழப்பு குறித்து எந்தத் தகவலும் தரவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்தனர். குற்றசெயல்புரிந்த காவலர்களுக்கு அரசும் காவல்துறையும் துணைபோகக்கூடாது. தமிழக காவல்துறை கண்ணியமிக்கது. அதில் உள்ள சில கருப்பு ஆடுகளை பாதுகாக்க நினைத்தால் காவல்துறை மேல் சந்தேகக் கண் எழும்.தவறு செய்த காவல் துறையினரை கைது செய்யுங்கள். காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஏற்கனவே சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால் உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு சிபி.ஐ விசாரணை செய்வோம் என முதல்வர் சொல்வது காலதாமதத்தை ஏற்படுத்த முதல் வர் செய்யும் தந்திரம்.

சிபி.ஐக்கு வழக்கு மாற்றப்பட்டாலும் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும். அரசும் காவல்துறையும் உடனடியாக செயல்படவில்லை என்றால் அது மிகப் பெரிய போராட்டத்திற்கு வழிவகுத்து இந்த அரசு வீழ்வதற்கு காரணமாகும்.யார் தவறு செய்தாலும் அவரைர்க் தண்டிப்பது தான் காவல்துறைக்கு அழகு. உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சார்பில் 10 லட் சம் நிதி வழங்கியுள்ளோம். பேய்க்குளத்தில் ஒரு நபரும் இதே காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளால் தாக்கபட்டு உயிரிழந்துள்ளார். அதேபோல தென்மாவட் டத்தில் 4 இடங்களில் காவல்துறையினர் தாக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வருகிறது இது குறித்தும் அரசு விசாரணை செய்யவேண்டும்” என்றார்.

;