,ஜூலை 16- கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, “கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பி னர்களாக உள்ள கைத்தறி நெச வாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களது வருவாயை அதிக ரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நெசவாளர்கள் தற்போது பெற்று வரும் அக விலைப் படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும். இத னால் 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள சுமார் 2 லட்சம் கைத்தறி நெசவா ளர்கள் பயன் பெறுவார்கள்” என்றார்.
விலையில்லா வேட்டி,சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு ரூ.39.27 காசுகளிலி ருந்து ரூ. 43 ஒரு காசாகவும், வேட்டி ஒன்றுக்கு ரூ. 21.60 காசுகளி லிருந்து, ரூ. 24 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். பெடல் தறி நெசவாளர்க ளுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 85 ரூபாய் 67 காசுகளிலிருந்து, 90 ரூபாய் 29 காசுகளாகவும், வேட்டி ஒன்றுக்கு 65 ரூபாய் 75 காசுகளிலிருந்து 69 ரூபாய் 58 காசுகளாகவும் உயர்த்தி வழங்கப்படும். அதே போன்று, விலையில்லா சீருடை திட்டத் தின் கீழ் வழங்கப்படும் கூலி, மீட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 32 காசுகளில் இருந்து, 12 ரூபாய் 16 காசுகளாக உயர்த்தி வழங்கப்ப டும். இதன் மூலம் தமிழ்நாடு முழு வதும் உள்ள 54 ஆயிரம் விசைத் தறி மற்றும் 10 ஆயிரத்து 500 பெடல் தறி கூலித்தொழிலா ளர்கள் பயனடைவார்கள் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
விதை விதை...
வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அள வில் வளர்ப்பதற்கு, முதற் கட்டமாக நடப்பாண்டில் ரூ. 10 கோடிசெலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங் கப்படும். சென்னை வண்ணா ரப்பேட்டையில், வேளாண் பொறி யியல் துறைக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நகரப்புற மக்க ளைக் கவரும் வகையில் “தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா’’ அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 1,000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணி மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ஏது வாக, நடப்பாண்டு திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதியுதவி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் முதல மைச்சர் கூறினார்.