சென்னை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி யை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தி கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கியுள்ளது. இதே அகவிலைப்படி உயர்வை அதே தேதியில் இருந்து தமிழக அரசும் வழங்கும்என ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல்தான் அகவிலைப்படி உயர்வுஅளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டது. கொரோனாவைக் காரணம் காட்டி ஏற்கெனவே 27 மாதங்களாகஅகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டதால் அரசு ஊழியர்கள்கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அகவிலைப்படி உயர்வு வழங்குவதைத் தள்ளிவைக்கக் கூடாது என்றும், இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை செவ்வாயன்று (செப்.7) காலை 10 மணிக்கு கூடியதும், ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுத்த ஆண்டு ஏப்ரல்முதல் அகவிலைப்படி உயர்வு அமலாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி முதல் அமலாகும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார் ள் என்றும்,அகவிலைப்படி மூன்று மாதம் முன்கூட்டியே வழங்கப்படுவதால், அரசுக்கு 1,620 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.மக்களாட்சி தத்துவத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்தில் அடித்தளமாக விளங்கக் கூடியவர்கள் அரசு ஊழியர்கள். அவர்கள் நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு, அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிச்சயம் நிறை வேற்றும் என்றும் முதலமைச்சர் கூறினார். இதன் முழு விவரம் வருமாறு:-
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப் படி உயர்வு 1.4.2022 முதல் அமல்படுத்தப்படும் என தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டிருந்தது. இது தொடர்பாக அரசுஊழியர் சங்கங்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசுக்கு கடும் நிதி நெருக்கடி நிலவும் சூழலிலும், அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும். அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக் காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அரசுப் பணி யாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதி மூலம் அவர்களின் பணித்திறன் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, உயர்கல்வித்தகுதிக்கான ஊக்கத்தொகை ஒன்றிய அரசு அண்மையில்அறிவித்துள்ள வழிகாட்டுதல் களின்படி, விரைவில் அறிவிக்கப் படும். அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தேவைக்கேற்ப தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வுபெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும். 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்தியவேலைநிறுத்தப் போராட்டங்கள் தொடர்பாக, தங்கள் வேலைநிறுத்தக் காலம் மற்றும் தற்காலிக பணிநீக்கத்தினை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனை கனிவுடன் பரிசீலித்து
தொடர்ச்சி 3ம் பக்கம்