tamilnadu

img

சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 3,26,245 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த வாரமாக ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு பதிவான நிலையில், இன்று 1187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று மட்டும் 5556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,67,015 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஒருநாள் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இன்று மட்டும் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று 83 பேர் அரசு மருத்துவமனையிலும், மீதமுள்ளோர் தனியார் மருத்துவமனையிலும் மரணமடைந்துள்ளனர். 5,514 பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பல வாரங்களுக்கு பிறகு சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.