tamilnadu

img

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;