tamilnadu

img

அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,டிச. 24- அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்  டங்கள், அதையொட்டிய உள்மாவட்டங்க ளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தி யாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு  மைய இயக்குநர் புவியரசன், வளிமண்டல  சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையி லும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப் போது நகரின் ஒருசில இடங்களில் லேசான  மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்க ளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்றும்  புவியரசன் கூறினார். அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யம், சீர்காழி,  கொள்ளிடம், கடலூர் மாவட்டம் அண்ணா மலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1  செ.மீ  மழை பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.