tamilnadu

img

15 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, ஆக.20- திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரி வித்துள்ளார். தமிழகத்தின் ஒருசில பகுதி களில் கடந்த சில நாட்களாக மழை  பெய்து வருகிறது. மேலும் 2 நாட்க ளுக்கு பெரும்பாலான மாவட்டங்க ளில் மிதமான மழை பெய்யும் என்று  சென்னை வானிலை மையம் தெரி வித்து உள்ளது. இதுகுறித்து வானிலை மைய  இயக்குனர் புவியரசன் செய்தி யாளர்களிடம் கூறுகையில்,“தமிழக கரையோரத்திற்கு அருகில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் காற்று சங்கமம் ஆவதால் அடுத்த 2 நாட்  களுக்கு பெரும்பாலான மாவட்டங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் அவர்  கூறினார். சென்னையில் வானம் பொது வாக மேக மூட்டத்துடன் காணப்ப டும். மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் பெய்யும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் திருச்சியில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.