tamilnadu

img

மத்திய அரசு ஊழியர்கள் மீது கொரில்லா தாக்குதல்

தொழிலாளர் விரோத போக்கு குறித்து விமர்சனம்

சென்னை, மே 22- மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப்  போக்கை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆயிரக்க ணக்கான மத்திய அரசு ஊழியர்கள் வெள்ளியன்று (மே 22)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத,  மக்கள் விரோத போக்கை கண்டித்தும், 8 மணி வேலை  நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பதை கைவிட  வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்  மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழு வதும் மத்திய அரசு ஊழியர்கள், பாதுகாப்புத் துறை  ஊழியரிகள், ஆலைத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கருப்பு நாளாக  கடைபிடித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வெள்ளியன்று (மே 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒருபகுதியாக சென்னை சாஸ்திரி பவன்  வளாகத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேள னத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாஸ்திரி  பவன் ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் சாம்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச்  செயலாளர் எம்.துரைபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து எம்.துரைபாண்டியன் செய்தி யாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு. கொரோனா  நோயை பயன்படுத்தி மத்திய அரசு ஊழியர்கள் மீது  கொரில்லா தாக்குதலை தொடுத்திருக்கிறது. 18  மாதங்களுக்கு 12 விழுக்காடு பஞ்சப்படியை முடக்கி யிருக்கிறார்கள். இதனால் ராணுவ வீரர்கள், மருத்து வர்கள், மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடந்தே செல்லும் 12 கோடிப்பேர்

12 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே  சென்று கொண்டிருக்கிறார்கள். 1.5 கோடி பேர் நாடு  முழுவதும் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியி லேயே குழந்தையை பெற்றெடுத்து, 13 நாட்கள் அந்த  குழந்தையை சுமந்து கொண்டே நடந்து செல்ல வேண்டிய அவல நிலை. 12 வயது இளம் பெண்  குடிக்க நீரில்லாமல் மயங்கி விழுந்து உயிரிழந்தி ருகிறார். சைக்கிளில், வாகனங்களில் சென்றவர்கள் விபத்து ஏற்பட்டு 400 பேர் மடிந்திருக்கிறார்கள். மத்திய  அரசு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், எச்சரிக்கை யும் செய்யாமல் பொது முடக்கம் என்ற பெயரில்  மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி யுள்ளது. பொது முடக்கத்தின் காரணமாக வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும். உணவுக் கிடங்கில் 77 மில்லியன் டன் உணவு இருப்பு உள்ளது.  அதை அனைவருக்கும் வழங்கினாலே பசியை போக்க முடியும். ஆனால் மத்திய அரசு இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. வருங்கால வைப்பு நிதியில் கடன் வாங்கினால் அந்த பணத்தையும், வருமான வரியில் நமக்கு திருப்பி  அளிக்கும் பணத்தையும் அரசு அந்த பட்டியலில் சேர்த்துள்ளார்கள். 2 லட்சம் கோடி ரூபாய்க்கு குறைவா கத்தான் சாதராண மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

பாஜக மாநில அரசுகள் காட்டுத்தர்பார்

பாஜக ஆளும் பல மாநிலங்களில் 8 மணி நேர  வேலை என்பதை 12 மணி நேரமாக உயர்த்தி அவசர  சட்டம் கொண்டு வந்த்துள்ளார்கள். பெண்களின் மகப்பேறு விடுப்பு பறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற  பல்வேறு தாக்குதலை மத்திய அரசு தொழிலாளர்கள் மீது தொடுக்க ஆரம்பித்துள்ளது. போராடி பெற்ற உரிமைகளை எல்லாம் படிப்படியாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி பறிக்க முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக  அனைத்து தரப்பு ஊழியர்களையும், தொழிலாளர்க ளையும் திரட்டி நாடு தழுவிய வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார். அதேபோல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  வருமான வரி அலுவலகத்தில் பொதுச் செயலாளர்  எம்.எஸ்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் சங்கத்தின் தலை வர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். தபால் கணக்கு துறை அலுவலகத்தில் ஆர்.பி. சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் எம்.புவனேஸ்வரி, சிங்காரவேலவன், கீதா, முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். ஏஜி அலுவலகம் ஆடிட் பிரிவில் தலைவர் நடராஜன் தலைமையிலும், அண்ணாசாலை தபால் நிலையத்தில் மாநிலச் செயலாளர் ஏ.வீரமணி தலை மையிலும்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து  கொண்டனர்.