சென்னை
கல்லூரி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது; இதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்தியமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்ச கத்திற்கு தமிழக உயர்கல்வித்துறையின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஏழை எளிய மாணவர்களின் கல்விபெறும் வாய்ப்பை தடுக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. புதிய தேசியக் கல்விகொள்கை வரைவு குறித்து மாநிலங்கள் ஆராய்ந்து வருகின்றன. இதன் அம்சங்கள் குறித்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு பரிசீலனை செய்து வருகிறது.தற்போது இந்த குழு மத்திய மனிதவளமேம்பாட்டிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அக்கடிதத்தில், பிளஸ்- 2 முடித்துஎந்த ஒரு கல்லூரி படிப்பைத் தேர்வு செய்வதற்கும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பது சரியான பரிந்துரை அல்ல. இந்த அம்சத்தை புதிய கல்விக்கொள்கையில் இருந்தே நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மும்மொழிக்கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், தேசியபொது நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும் தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.