tamilnadu

img

கந்து வட்டிக் கொடுமையால் 3 குழந்தைகளின் தந்தை தற்கொலை

சேலம், நவ.2- கந்து வட்டிக் கொடுமையால் மூன்று குழந்தைகளின் தந்தை சேலத்தில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் கு.மருது பாண்டியன் (30). இவா் வெல்டிங் பட்டறை யில்  வேலை செய்துவந்தார். இவருக்கு பூஜா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனா். இதனிடையே மருதுபாண்டியன் வீட்டுச் செலவுக்காக வட்டிக்கு ரூ.60 ஆயிரம் கடன் வாங்கிய தாகத் தெரிகிறது. மேலும் வட்டி தொகை யுடன், அசல் தொகையை செலுத்த முடி யாமல் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப் படுகிறது.

இதனிடையே கடன் கொடுத்தவா்கள் தினமும் மருதுபாண்டியனின் வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர் என தெரிகிறது.இதனால் மனமுடைந்த மருதுபாண்டியன் சனிக்கிழமையன்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கிச்சிப்பாளையம் காவல்துறையினர், மருது பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி,உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.